24 66fa3a8798a4f
இலங்கை

எரிபொருள் விலைக் குறைப்பு – ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு

Share

எரிபொருள் விலைக் குறைப்பு – ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் (IOC) அறிவித்துள்ளது.

அதேநேரம் சினோபெக் (Sinopec) நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று (1.10.2024) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும் வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாயாகும். 352 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாய் என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

12 14
இலங்கைசெய்திகள்

மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி: சஜித்தின் வேண்டுகோள்

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இது...

13 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான்

இலங்கையில், ஜப்பான் நிறுவனங்கள், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று தாம்...

14 13
இலங்கைசெய்திகள்

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து – பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என...