25 678e0df5b195c
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Share

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை விரைவில் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

களுத்துறை – கட்டுகருந்தவில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு சிறிது எடுக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கடனை திறைசேரி உள்வாங்கிய பிறகு எரிபொருளுக்கு ஒரு பாரிய வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திறைசேரி உள்வாங்கியுள்ளதாகவும், அந்தக் கடனை வசூலிப்பதாற்காகவே எரிபொருளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், கடனை அடைக்கும் வரையில் எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்காக கடன் செலுத்தும் காலத்தை விரைவில் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க நிதி அமைச்சு, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...