24 661e76a542590
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை

Share

இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இன்று எமது வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதை நாங்கள் இப்போது காண்கின்றோம்.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இன்று எரிபொருட்களின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளது. டிசம்பர் 31ஆம் திகதி 2019ஆம் ஆண்டு பெட்ரோலின் விலை 134 ரூபாவாக இருந்தது. இப்போது அது 360 ரூபாவாக பாரியளவில் உயர்ந்துள்ளது.

95 ரூபாவாக இருந்த சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 240 ரூபாவாக அதிகரித்துள்ளது. 19 ரூபாவாக இருந்த ஒரு முட்டை இப்பொழுது 50 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு மத்தியிலேயே எமது நாட்டு மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இருக்கும் இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு ஒரு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...