rtjy 117 scaled
இலங்கைசெய்திகள்

காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி

Share

காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி

காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் சேமிப்பதற்கும் போதிய நிதியின்மை மற்றும் எரிபொருளை சேமிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. நாட்டில் 30 நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்கும் முறைக்கு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​எண்ணெய் நிறுவனம் 30 நாள் எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

போதிய நிதி மற்றும் சேமிப்பிடம் இல்லாத காரணத்தால் எதிர்காலத்தில் இருப்பு வைப்பது சிரமமான போதிலும், அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை சமாளிக்கலாம் என அமைச்சின் செயலாளர் கோப் குழுவிடம் இந்த வாரம் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், திருகோணமலையில் உள்ள 24 எண்ணெய் தாங்கிகளில் 12 தரம் உயர்த்தி சேமிப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது 60 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல், 40 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல், 3500 தொன் ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் 20 ஆயிரம் மெற்றிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாக எரிபொருள் பங்கு மீளாய்வுக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...