25 6848105265dab
இலங்கைசெய்திகள்

பொசன் தினத்தில் இலவச கண் சத்திர சிகிச்சை

Share

பொசன் போயா தினத்தை முன்னிட்டு சுமார் 300 பேருக்கு கண் தொடர்பான சத்திரசிகிச்சை வழங்கும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி, கண் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் கசுன் குணவர்தனவின் யோசனையின் அடிப்படையில், கண் பிரச்சினைகள் உள்ள 300 பேருக்கு இன்று (10) காலை 5 மணி முதல் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஒரு சத்திரைசிகிச்சை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதன்போது ஒரே ஒரு சிறப்பு வைத்தியர் மாத்திரம் கண்புரை அகற்றுதல் மற்றும் உள்விழி உயிரியல் வில்லை(Lens fitting) பொருத்துதல் உள்ளிட்ட ஏராளமான கண் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின், துணை இயக்குநர் வைத்தியர் மதுஷா சத்குமார கூறுகையில்,

அறுவை சிகிச்சை அறையில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் தாதிய ஊழியர்களும் மற்றும், வைத்தியசாலையில் உள்ள மருத்துவ, தாதிய மற்றும் ஊழியர்களும், அதிகாரிகளுடன் இணைந்து பல நாட்கள் கடுமையாக உழைத்து இந்த தொண்டு செயலை மேற்கொண்டனர்.

ஆரம்பத்தில் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு, தொடர்புடைய பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், 250 முதல் 350 பேர் வரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...