24 66148cd3bca48
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள்

Share

இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள்

நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக நேபாள(Nepal) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காக கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இலங்கை பிரஜைகள் நால்வரும் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் நால்வரை கடந்த 4ஆம் திகதி அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

நேபாள பொலிஸின் காத்மாண்டு நகர குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

42 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பாகிஸ்தானிய பிரஜைகள் இவ்வாறு கைது செய்ப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் பாகிஸ்தான் பிரஜைகளால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை மிரட்டலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...