tamilni 40 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பிரபல உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி

Share

இலங்கையின் பிரபல உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி

உலகின் பிரபல உணவு விற்பனை நிறுவனத்தின் இலங்கைக் கிளையொன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபர் ஒருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார்.

அவர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளான அந்த நபர், முழுமையாக சமைக்கப்படாத கோழி இறைச்சித் துண்டுகளோடு குறித்த உணவகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதன்போது, கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல் இருப்பதுடன், அதில் இரத்தம் உள்ளதையும் உணவகத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் காண்பித்துள்ளார்.

அத்துடன், குறித்த இறைச்சித் துண்டுகள் தனது பிள்ளைகளுக்காக வாங்கிச் சென்றது என்றும் அவர்கள் இதனை உண்டு நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...