2 53
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் நுழைந்து, தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மீதான வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(30.01.2025) குறித்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்த போதிலும், அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரியா திடீரென விடுமுறை எடுத்ததால், ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு செயல் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை தரப்பு நடத்திய விசாரணையின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ. சுமந்திரன், கேசவன் சஜந்தன் மற்றும் பெனஸ்லான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 692bfb29122ad
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்டத்தில் சூறாவளிப் பாதிப்பு: 240 உயிரிழப்புகள், 75 பேர் மாயம் – 1.89 இலட்சம் பேர் பாதிப்பு! 🌪️

திட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில்...

25 679df8be8f807
அரசியல்இலங்கைசெய்திகள்

நிர்மலா சீதாராமனுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு: பெருந்தோட்ட சமூக நலன் குறித்து பேச்சு!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில்...

articles2F5erOvsc6djiIYVO8MiFX 1
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐ.நா.வின் 35.3 மில்லியன் டொலர் நிதி கோரிக்கை!

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை...

MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...