2 53
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் நுழைந்து, தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மீதான வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(30.01.2025) குறித்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்த போதிலும், அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரியா திடீரென விடுமுறை எடுத்ததால், ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு செயல் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை தரப்பு நடத்திய விசாரணையின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ. சுமந்திரன், கேசவன் சஜந்தன் மற்றும் பெனஸ்லான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...