2 53
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

தமிழ் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய முன்னாள் அமைச்சர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் நுழைந்து, தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மீதான வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(30.01.2025) குறித்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்த போதிலும், அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரியா திடீரென விடுமுறை எடுத்ததால், ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு செயல் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை தரப்பு நடத்திய விசாரணையின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ. சுமந்திரன், கேசவன் சஜந்தன் மற்றும் பெனஸ்லான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...

image b726ec86c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டன் – டிக்கோயாவில் அனைத்து கட்டுமானங்களுக்கும் உடனடித் தடை: மீறினால் கடும் நடவடிக்கை!

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, ஹட்டன்-டிக்கோயா நகர சபை...

25 687ca2a2564c6
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி!

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி...

gen z and workplace boundaries ai image
செய்திகள்இந்தியா

‘Gen Z’ பணியாளர்கள் மத்தியில் பரவும் ‘மௌன விலகல்’!

இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது...