பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (26) தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேக நபரின் உடமையில் இருந்து 196 கிலோ 218 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் தொம்பே பகுதியில் வசிக்கும் 44 வயதான நபராவர். இவர் இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் ‘பைலட் சார்ஜெண்டாக’ பணியாற்றி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர், நீதிமன்றங்களில் இருந்து தலைமறைவாகி, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான செம்புக்குட்டி ஆராச்சிகே டிலான் தனுஷ்க லக்மாலின் மைத்துனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.