13 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தனியாக தவித்த சீன பிரஜை ஒருவருக்கு விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி 65 வயதான சீன பிரஜை ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எனினும் அவரின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

குறித்த நபர் சீனாவுக்கு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு இன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலையத்தின் அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்களை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக குறித்த சுற்றுலா பயணிக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளனர்.

அத்துடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகமவின் நேரடி தலையீட்டின் மூலம், சீனத் தூதரகத்தின் ஊடாக அவருக்கு பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து குறித்த சீனப் பிரஜை நேற்று முன்தினம் யுஎல்-884 விமானம் சீனாவுக்கு சென்றுள்ளார்.

Share
தொடர்புடையது
25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக்...

25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை...

images 18
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபைத் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02.06.2025) கைது செய்யப்பட்ட தலவாக்கலை (Talawakelle) – லிந்துலை...

25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத்...