இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்திய வெளிநாட்டு இளைஞர்,யுவதிகள்

tamilni 403

இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்திய வெளிநாட்டு இளைஞர்,யுவதிகள்

அம்பலாங்கொடை கடற்கரையை நேற்று (29ஆம் திகதி) காலை சுத்தப்படுத்தும் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த வேலை திட்டத்தினை ஏற்பாடு செய்த அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தின் சில அதிகாரிகள் தவிர பலர் தாமதமாகவே வருகை தந்துள்ளனர்.

அம்பலாங்கொட பொல்வத்த அஷிக சேனவிரத்னவினால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள்,யுவதிகள் குழுவினரே கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்துகொண்டுள்ளது.

Exit mobile version