18 28
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: மனுஷவின் சகாக்கள் தலைமறைவு!

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: மனுஷவின் சகாக்கள் தலைமறைவு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்( Manusha Nanayakkara) சகோதரர் திசர ஹிரோஷன நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டியே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மனுஷ நாணயக்காரவுக்கு நெருங்கிய மேலும் சில தரப்பிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளராக இருந்த பாக்ய காரியவசம் என்ற நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர், இஸ்ரேல் தொழில் மற்றும் தென்கொரிய வேலைகளை பெற்று தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர் மற்றும் பலர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த தேசப்பிரிய லியனகே என்பவரும் இந்த மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...