2 1 27
இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் தொடரும் : சூளுரைக்கும் ஹூதி

Share

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் தொடரும் : சூளுரைக்கும் ஹூதி

யேமனில் (Yemen) இஸ்ரேலிய (Israel) தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள போதிலும் தங்களது பதில் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் (Gaza) இடம்பெற்ற இனப்படுகொலைக்குப் பதிலளிக்கும் வகையில் தங்களது தரப்பிலிருந்து தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி படையின் அரசியல் தலைவரான மொஹமட் அல்-புகைதி தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேல் மீதான தங்களது இராணுவ இலக்குகளை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக யேமனின் தலைநகரான சனா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அங்குள்ள விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் என்பவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதன்போது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஈரான் ஆதரவு குழுவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் தாம் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...