tamilni 305 scaled
இலங்கைசெய்திகள்

முகவர் மூலம் வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை

Share

முகவர் மூலம் வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை

கட்டாருக்கு வேலைக்கு சென்று தொழில் கிடைக்காமல் திரும்பி வந்த இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்புக் கடிதம், வேலை ஒப்பந்தம் இல்லாமல், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, கட்டாருக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு வேலை கிடைக்காமல், இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கிய நிலையில், சொந்த செலவில் நாடு திரும்பியவர்கள் தொடர்பான தகவல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு இந்த இரண்டு கடிதங்களில் ஒன்றை வைத்திருப்பது அவசியமாகும்.

இவர்கள் இருவரும் நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இரு இளைஞர்களாவர்.

கட்டாரில் உள்ள இலங்கை வேலை வழங்கும் தரகர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலா 05 இலட்சம் கொடுத்துவிட்டு கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி அங்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

05 வருடங்கள் நாட்டில் தங்கி வேலை செய்வதற்குத் தேவையான விசாக்கள் தங்களிடம் இருப்பதாக தரகர் கூறியிருந்தார். ஆனால் கட்டாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில், அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் இருவருக்கும் 90 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு தேவையான சுற்றுலா விசாக்களை வழங்கியுள்ளனர்.

குறித்த இரண்டு இளைஞர்களும் கத்தாரில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து வேலை கிடைக்காமல், நேற்று சொந்த செலவில் இலங்கை திரும்பியுள்ளனர்.

மேலும் 11 இலங்கை இளைஞர்கள் வேலையின்றி இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் இந்த இளைஞர்கள் தங்கியிருந்த விடுதியில் இருப்பதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், வர்த்தக மற்றும் சட்டவிரோத குடிவரவு பிரிவின் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...