இலங்கையில் கேள்விக்குறியாகி வரும் உணவுப் பாதுகாப்பு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கேள்விக்குறியாகி வரும் உணவுப் பாதுகாப்பு

Share

இலங்கையில் கேள்விக்குறியாகி வரும் உணவுப் பாதுகாப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, சுமார் 3.9 மில்லியன் இலங்கையர்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என தெரியவந்துள்ளது.

சுமார் 2.9 மில்லியன் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, தண்ணீர் மற்றும் சுகாதாரம், மற்றும் சமூகப் பாதுகாப்பு சேவைகளைப் பெற மனிதாபிமான உதவி தேவை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த மே மாத நிலவரப்படி சுமார் 3.9 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் துறை சமூகங்கள் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சமுர்த்தி அல்லது ஊனமுற்றோர் நலன்கள் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் அதிகம் தங்கியுள்ளவர்கள் உள்ளடங்குகின்றனர்.

நாட்டில் வெளிப்படையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பட்ட உணவுப் பாதுகாப்பு இருப்பதாக தெரிகிறது. எனினும் கடந்த மே மாதத்தில் 48 சதவீத மக்கள், சேமிப்பைத் திரும்பப் பெறுதல், பணம் கடன் வாங்குதல் மற்றும் கடனில் உணவை வாங்குதல் போன்ற வாழ்வாதார அடிப்படையிலான சமாளிப்பு உத்திகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

26 சதவீத குடும்பங்கள் அவசரகால அல்லது நெருக்கடி நிலை வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றன.

உற்பத்தி சொத்துக்களை விற்பது, கல்விச் செலவுகளைக் குறைத்தல், குழந்தைகளை பாடசாலையில் இருந்து முழுவதுமாக விலக்குதல் மற்றும் நிலத்தை விற்பது ஆகியவை இதில் அடங்குகின்றன.

வரட்சி நிலைமைகள் எதிர்வரும் பெரும்போக விவசாயப் பருவத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏற்கனவே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 45,000 ஏக்கர் நெற்பயிர்கள் கடுமையான வறட்சியினால் அழிவடையும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...