இலங்கைசெய்திகள்

திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம் – இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

22 1
Share

திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம் – இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டலொன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில், இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவர் ஒருவரின் திருமணத்தின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது, மேலும் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

தங்கள் நண்பரின் திருமணத்தின் போது மது அருந்திக்கொண்டிருந்த மருத்துவர்கள் குழு ஒன்று நடனமாடி மகிழ்ந்தனர்.

சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் வன்முறையாக மாறியமையால் மருத்துவர்கள் குழு மோதிக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண விழாவில் கலந்து கொண்ட இரு தரப்பினரின் உறவினர்களும் அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.

மோதலைத் தொடர்ந்து, இரு குழுக்களும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் மோதலில் காயமடைந்த மருத்துவர்கள் சிலர் சிகிச்சைக்காக களுத்துறையில் உள்ள நாகோடா மருத்துவமனைக்குச் செல்வதாகக் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...