22
இலங்கைசெய்திகள்

சிறப்பு நிலையான வைப்பு திட்டம் – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

Share

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையில் முதியோருக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களால் திறக்கப்படும் நிலையான வைப்புகளுக்கு செயல்படுத்தப்படும்.

நிலையான வைப்பு காலம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்ச வைப்பு மதிப்பு ஒரு மில்லியன் ரூபாயாகும்.

பொதுவாக வங்கியின் நிலையான வட்டி வீதத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 3 சதவீதம் சேர்க்கப்படும் தொகை அல்லது உரிய வங்கியினால் வெளியிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி விகிதம் ஆகியவற்றில் அதிகமான வட்டி வீதம் செலுத்தப்படும்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...