15
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதியின் மனைவி உட்பட 5 அரசியல்வாதிகள் விரைவில் கைது

Share

அரசியல்வாதியின் மனைவி உட்பட 5 அரசியல்வாதிகள் விரைவில் கைது

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணத்தை மோசடி செய்த அரசியல்வாதி, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர், சுற்றுலா சபையின் முறைகேடுகளில் ஈடுபட்ட தலைவர்கள் என பலர் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மிக் விமான ஒப்பந்தத்தில் மோசடிகளில் ஈடுபட்ட பிரதிவாதிகள் குழு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்தத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...