யாழ் ஆலயமொன்றில் இடம்பெற்ற சம்பவம்
இலங்கைசெய்திகள்

யாழ் ஆலயமொன்றில் இடம்பெற்ற சம்பவம்

Share

யாழ் ஆலயமொன்றில் இடம்பெற்ற சம்பவம்

யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான பூசகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் திருடப்பட்ட கைத்தொலைபேசிகளின் பெறுமதி 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என கூறப்படுகின்றது.

ஜூலை 8 ஆம் திகதி கோயிலில் நடைபெற்ற பூஜையின் பின்னர், பூசகர்கள் நள்ளிரவில் கோயில் மண்டபத்தில் தூங்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அதிகாலை 4.15 மணியளவில் அவர்கள் கண்விழித்தபோது, அவர்களது தொலைபேசிகள் காணாமல் போனது தெரியவந்த நிலையில் பூசகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

5 பூசகர்களும் கையடக்கத் தொலைபேசிகளை தரையில் வைத்துவிட்ட உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் கைத்தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் அண்மைய காலங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விரந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...