photodune 2008349 the drowning man m
இலங்கைஅரசியல்செய்திகள்

நீரில் மூழ்கி ஐவர் பலி!!

Share

உமாஓயா கரந்திஎல்ல பகுதியில் நீராடசென்ற நிலையில் ஐந்து பேர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இந்த நிலையில், காணாமல் போன நான்கு பேர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க்பட்டது.

இந்த நிலையில், காணாமல் போயிருந்த 22 வயதுடைய யுவதியொருவர் சடலமாக இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஹட்டம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21, 19, 23 வயதுகளை உடைய மூன்று யுவதிகளும், 23 வயதுடைய இளைஞனொருவரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹட்டம்பிட்டிய பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த சிலரே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டம்பிட்டி பொலிஸார் எமது தமிழ்நாடி செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...