27 8
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

Share

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

களுத்துறையில் இருந்து கொழும்பு, மருதானை நோக்கி செல்லும் விரைவு தொடருந்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் பின் எஞ்சின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

தீயினால் இயந்திரம் பாரியளவில் சேதமடையவில்லை, தற்போது தொடருந்து தெற்கு களுத்துறை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீப்பற்றிய தொடருந்தில் பயணித்த பயணிகள் மற்றுமொரு தொடருந்து மூலம் மருதானை தொடருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...