27 8
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

Share

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

களுத்துறையில் இருந்து கொழும்பு, மருதானை நோக்கி செல்லும் விரைவு தொடருந்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் பின் எஞ்சின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

தீயினால் இயந்திரம் பாரியளவில் சேதமடையவில்லை, தற்போது தொடருந்து தெற்கு களுத்துறை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீப்பற்றிய தொடருந்தில் பயணித்த பயணிகள் மற்றுமொரு தொடருந்து மூலம் மருதானை தொடருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...