27 8
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

Share

கொழும்பு நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் தீ விபத்து

களுத்துறையில் இருந்து கொழும்பு, மருதானை நோக்கி செல்லும் விரைவு தொடருந்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் பின் எஞ்சின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

தீயினால் இயந்திரம் பாரியளவில் சேதமடையவில்லை, தற்போது தொடருந்து தெற்கு களுத்துறை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீப்பற்றிய தொடருந்தில் பயணித்த பயணிகள் மற்றுமொரு தொடருந்து மூலம் மருதானை தொடருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...