2 14
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப்பின்னர் வெடிக்கப்போகும் போராட்டம் : ரணில் எச்சரிக்கை

Share

எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப்பின்னர் வெடிக்கப்போகும் போராட்டம் : ரணில் எச்சரிக்கை

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று (9) தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் சேறு பூசி தாம் எழுப்பும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை மறைக்க முயல வேண்டாம் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு எதிர்காலம் வேண்டுமெனில் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அனுபவம் வாய்ந்த அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு கோருவதாக தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் புதிய நாடாளுமன்றத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம்.தனது கொள்கை என்ன என்பதை ஜனாதிபதி நாட்டுக்கு தெரிவிக்கவேண்டிய கடமை உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்ன்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான(imf) உடன்படிக்கையை திசைகாட்டி நிராகரித்தது.ஆனால் தற்போது அந்த உடன்படிக்கையை செயற்படுத்துவது குறித்து ஐ எம் எவ் உடன் கலந்துரையாடி வருகிறது.

இந்த உடன்படிக்கையில் ஏதாவது திருத்தம் உள்ளதா என்பது எமக்கு தெரியாது. எனவே ஐஎம் எவ் உடனான உடன்படிக்கை,அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...