15 23
இலங்கைசெய்திகள்

இராணுவத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

Share

போர் முடிந்த பின்னர், நாட்டின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்று, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தேசிய போர்வீரர் தினத்தை நினைவுகூரும் வகையில், இன்று இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவடைந்ததிலிருந்து, கடந்த 16 ஆண்டுகளில் இராணுவத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கூற்றை தம்மால் ஏற்கமுடியாது என்று,அவர் தெரிவித்துள்ளார்.

தாம் போரில் ஈடுபட்டிருந்தபோது, இராணுவத்திடம்; 80 தாங்கிகள் இருந்தன. போர் முடிவடையும் நேரத்தில், அவற்றில் 50 அழிக்கப்பட்டன. இன்று, இராணுவத்தில் சுமார் 30 தாங்கிகள் மட்டுமே உள்ளன.

இந்தநிலையில், படைப்பிரிவுகளுக்கு தாங்கிகள் தேவை. தனியாக ஆட்கள் இருப்பதும், சில அடிப்படை இராணுவ உபகரணங்கள் இருப்பது மட்டும் போதாது என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அழிக்கப்பட்ட படையினரின் 50 தாங்கிகளுக்குப் பதிலாக, 50 மாற்று தாங்கிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவ்வாறான முனைப்புக்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஒரு தாங்கியைப் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. சிறப்புப் பணிப் படைக்கு ஒரு சிப்பாயைப் பயிற்றுவிக்க இரண்டு ஆண்டுகள் அவசியமாகின்றன.

ஒரு கொமாண்டோவைப் பயிற்றுவிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகி;ன்றன. எனவே போர் என்பது வானத்திலிருந்து விழும் குண்டுகளுடன் ஆரம்பிக்கக்கூடிய விடயமல்ல.

எனவே எப்போதும், எந்த நேரத்திலும் படையினர் தயார் நிலையிலேயே இருக்கவேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...