மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

Share

மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காய்ச்சிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த வறண்ட பருவத்தில், சாதாரண நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால், தண்ணீர் விநியோகம் மக்களுக்கு கடுமையான பிரச்சினையாக உள்ளது.

குறிப்பாக கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் போது இந்த நிலை தீவிரமான சூழ்நிலையாக மாறி வருகிறது.

கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகள் போன்றவை வறண்டு கிடப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை பெற முயற்சிக்கின்றனர். அந்த நீர் ஆதாரங்களில் சில அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே மக்கள் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து வரும் நீரை எதிர்காலத்தில் பயன்படுத்தும் போது வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

ஆகவே, நீங்கள் குடிக்கும் நீர் ஆதாரம் சுத்தமாக இல்லை என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், குறைந்தபட்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...