மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

Share

மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காய்ச்சிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த வறண்ட பருவத்தில், சாதாரண நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால், தண்ணீர் விநியோகம் மக்களுக்கு கடுமையான பிரச்சினையாக உள்ளது.

குறிப்பாக கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் போது இந்த நிலை தீவிரமான சூழ்நிலையாக மாறி வருகிறது.

கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகள் போன்றவை வறண்டு கிடப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை பெற முயற்சிக்கின்றனர். அந்த நீர் ஆதாரங்களில் சில அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே மக்கள் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து வரும் நீரை எதிர்காலத்தில் பயன்படுத்தும் போது வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

ஆகவே, நீங்கள் குடிக்கும் நீர் ஆதாரம் சுத்தமாக இல்லை என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், குறைந்தபட்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 10
செய்திகள்உலகம்

பெய்ரூட் ஹோட்டல் மீதான தாக்குதல்: நான்கு ஈரானிய தூதரக அதிகாரிகள் பலி – ஈரான் கடும் கண்டனம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரமாடா (Ramada) ஹோட்டல் மீது கடந்த மார்ச் 8-ம் தேதி...

09 10
இலங்கைசெய்திகள்

நீர் கட்டண உயர்வு இல்லை: ஜூன் மாதம் கட்டணத் திருத்தம் – அமைச்சர் சுசில் ரணசிங்க!

தற்போதைய சூழலில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும்...

08 10
செய்திகள்இலங்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின்...

06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...