28 17
இலங்கைசெய்திகள்

விலை குறைப்பு தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

விலை குறைப்பு தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, தேயிலை செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 200, T 750, U 709, U 834, T 65 ஆகிய 5 வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் 50 கிலோ கிராம் உர மூட்டையின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உர மானியத்தை வழங்குவதற்கான மொத்த செலவு 2,400 மில்லியன் ரூபாவாகும்.

குறித்த பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறாமல் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை தேயிலை சபையின் நிதியை பயன்படுத்தி முழு தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....