16 11
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

Share

நெற்பயிற்செய்கை செய்யும் விவசாயிகளுக்கு நிதி மானியத்துடன் கூடுதலாக 25000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எம்.ஓ.பி உரத்தையும் இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பெரும் போகத்தின் போது, அரசாங்கம் ரூ. 25,000 உர மானியத்தையும் இலவச சிவப்பு தூள் உரத்தையும் வழங்குவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதன்படி, 2024 ஒக்டோபர் 01 முதல் 2025 பெப்ரவரி 01 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ரூ. 25,000 உர மானியம் இரண்டு கட்டங்களாக, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல் தவணை ரூ. 15,000 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பயனுள்ள அமைப்பை செயல்படுத்த அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...