tamilni 183 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணை

Share

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் புதிய விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

எனினும் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், மீளவும் அவ்வாறான விசாரணைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பனவற்றின் ஊடாக கிரமமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள காரணத்தினால் மீண்டும் அவ்வாறானதொரு விசாரணை தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் இடம்பெற்றதன் பின் அவுஸ்திரேலிய பொலி, அமெரிக்காவின் எஸ்பிஐ மற்றும் இன்டர்போல் போன்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தியதாகவும் அந்த தகவல்கள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...