tamilni 183 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணை

Share

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மீள் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் புதிய விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

எனினும் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், மீளவும் அவ்வாறான விசாரணைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பனவற்றின் ஊடாக கிரமமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள காரணத்தினால் மீண்டும் அவ்வாறானதொரு விசாரணை தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் இடம்பெற்றதன் பின் அவுஸ்திரேலிய பொலி, அமெரிக்காவின் எஸ்பிஐ மற்றும் இன்டர்போல் போன்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தியதாகவும் அந்த தகவல்கள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6
இலங்கைசெய்திகள்

இன்று டிசம்பர் 4 வானிலை முன்னறிவிப்பு: மேல் மற்றும் சப்ரகமுவாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

இன்று டிசம்பர் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல...

593805334 1428934088793122 3948868341512753198 n
இலங்கைசெய்திகள்

இந்திய நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த விமானம் : வீதிப் புனரமைப்புக்கு 50 டன் இரும்புப் பாலங்கள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களின் நிவாரணப் பணிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான...

676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...