தந்தை செல்வாவின் நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மூதறிஞர் தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு தூபியில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலி யும் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி யும் செலுத்தினார். இதன் பின்னர் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.
#srilankaNews
Leave a comment