யானை தாக்கி விவசாயி
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலி!

Share

மட்டக்களப்பு, கரடியனாறு – ஈரக்குளத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனக் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கராசா (வயது 55) என்பவரே பலியாகியுள்ளார்.

இந்த நபர் பயிர்ச்செய்கை நடவடிக்கையிலும், மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருபவர். நேற்றுப் பால் கறப்பதற்காகத் தனது மாடுகளைத் தேடிச் சென்றபோது, மறைந்திருந்த யானையொன்று அவரைத் தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேசத்துக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தைப் பார்வையிட்டார்.

சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...