18 21
இலங்கைசெய்திகள்

பிரபல நடிகையின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

Share

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதாள உலகத்தினரின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் T-56 துப்பாக்கிகள் தொடர்பில் விசாரிக்கும் சிறப்பு பொலிஸ் குழு, பிரபல நடிகை ஒருவரின் வீட்டையும் பரிசோதனை செய்துள்ளது.

நடிகையின் மகனுக்கு துப்பாக்கி விற்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரபல நடிகையின் வீடு முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நடிகை அரசியலுடன் தொடர்புகளை கொண்ட ஒருவராகும். மேலும் அவரது கணவரின் வணிகங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் போது சில அரசாங்க அமைச்சர்களிடமிருந்து சலுகைகளை பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.

குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில், முகாமில் இருந்து 73 T-56 துப்பாக்கிகள் உட்பட சுமார் 75 துப்பாக்கிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆயுதங்களிலிருந்து 36 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 39 ஆயுதங்கள் மீட்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த துப்பாக்கி கடத்தல் பற்றிய தகவல் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று தகவல் தெரியவந்தது.

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹோமாகம, பிடிபனவில் உள்ள ஒரு வணிக இடத்தை சோதனை செய்தபோது, ​​அங்கு 11 T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு T-81 துப்பாக்கி உட்பட ஏராளமான இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...