25 6939493514bdf
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்!

Share

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் இன்று (டிசம்பர் 10) உணர்வுபூர்வமான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும், நீதி கோரிய பதாதைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றும், “எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை” என அவர்கள் உணர்ச்சி பொங்க வலியுறுத்தினார்கள்.

அத்துடன் அரசியல் கைதிகளுக்கான விடுதலை, பௌத்தமயமாக்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வை பெற்று தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களைப் புரிந்துகொண்டு, தமக்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் இதில் கலந்துகொண்டு கண்ணீர் மல்க இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...

25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...