18 4
இலங்கைசெய்திகள்

அநுர அரசில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாணயத்தாள்

Share

அநுர அரசில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள் தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டரெக பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் படத்தை பயன்படுத்தி போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை இணையத்தில் வெளியிட்டதாக அவர் மீதான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிலியந்தலையில் வைத்து நேற்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பண மதிப்பு நீக்கம் தொடர்பாக அரசியல் அரங்கில் காரசாரமான விவாதம் எழுந்தது.

போலி நாணயத்தாள்
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான பணம் அச்சிட்டுள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும், அந்த அறிக்கைகள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள் ஒன்றை காட்டுமாறு அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...