18 4
இலங்கைசெய்திகள்

அநுர அரசில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாணயத்தாள்

Share

அநுர அரசில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாள் தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டரெக பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் படத்தை பயன்படுத்தி போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை இணையத்தில் வெளியிட்டதாக அவர் மீதான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிலியந்தலையில் வைத்து நேற்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பண மதிப்பு நீக்கம் தொடர்பாக அரசியல் அரங்கில் காரசாரமான விவாதம் எழுந்தது.

போலி நாணயத்தாள்
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான பணம் அச்சிட்டுள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும், அந்த அறிக்கைகள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள் ஒன்றை காட்டுமாறு அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...