9 33
இலங்கைசெய்திகள்

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

Share

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

சட்டவிரோத இரட்டைக் குடியுரிமைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா (Diana Gamage) கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் டயானா கமகேவை முன்னிலைப்படுத்திய போது மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தவறான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை மற்றும் சட்டவிரோத இரட்டைக் குடியுரிமையை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர், டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே, இந்த குற்றச்சாட்டின் பேரில் டயானாவின், நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...