9 33
இலங்கைசெய்திகள்

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

Share

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

சட்டவிரோத இரட்டைக் குடியுரிமைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா (Diana Gamage) கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் டயானா கமகேவை முன்னிலைப்படுத்திய போது மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தவறான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை மற்றும் சட்டவிரோத இரட்டைக் குடியுரிமையை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர், டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே, இந்த குற்றச்சாட்டின் பேரில் டயானாவின், நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...