tamilni 308 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பாரிய மோசடி செய்த தம்பதி

Share

அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பாரிய மோசடி செய்த தம்பதி

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 லட்சம் ரூபாவை மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை கோரக்கான பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மேஜர் யாழ்ப்பாணம் முகமாலை மிரிசுவல் பகுதியில் உள்ள முகாமில் பணியாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வடக்கு பொலிஸ், பாணந்துறை தெற்கு, தெஹிவளை, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த 6 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான மேஜர் கடந்த 10ம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு நபர்களிடம் இருந்து மனைவி பெற்ற பணம் மேஜரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேஜரின் மனைவியும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...