சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடி காலம் நீடிப்பு

cc

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்படவுள்ளது.

அதன்படி சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் 30 வரை திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் குறித்த திகதியிலிருந்து 12 மாதங்கள் நீடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய ஒக்ரோபர் 01 காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடி காலம் அடுத்த ஆண்டு மார்ச் 22 வரை தொடர்புடைய திகதியிலிருந்து 06 மாதங்கள் நீடிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version