2 இளைஞர்கள் மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிக போதைப்பொருள் பாவனையால் மன்னாரில் 2 இளைஞர்கள் சாவு!

Share

அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக மன்னாரில் இரு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேசாலையைச் சேர்ந்த வித்திராஸ் மௌசாட் (வயது – 35), தலைமன்னாரைச் சேர்ந்த மகேந்திரன் பிரதீப் (வயது – 26) ஆகிய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திடீர் சுகயீனமடைந்துள்ளனர் என்று தெரிவித்து மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் அனுமதிக்க முன்பே உயிரிழந்துவிட்டனர் என்று வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஒரு வாகனத்தில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணிக்க முற்பட்ட வேளை நோய்வாய்ப்பட்டனர் என்று தெரிவித்து மேற்படி இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தில் இருந்த எஞ்சிய இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. அதேவேளை, உயிரிழந்த இருவரினதும் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...