5 40
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட அதிக பணம்

Share

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட அதிக பணம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திற்காக 50 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இந்த சுற்றுப்பயணத்தில் 77 பேரை அழைத்துச் சென்றார், இதில் அப்போதைய முதல் பெண்மணி உட்பட மொத்தம் ஒன்பது அமைச்சர்கள் அடங்கியிருந்தனர்.

அதிகாரப்பூர்வ குழுவில் 28 உறுப்பினர்கள், இரண்டு நெறிமுறை அதிகாரிகள், 13 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 28 ஊடக பணியாளர்களும் இருந்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் மொத்த செலவு 50.4 மில்லியன் ரூபாய்கள்; என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக 72 உறுப்பினர்களை அழைத்துச் சென்றார்.இதன் மொத்த செலவு 9.5 மில்லியன் ரூபாய்கள் ஆகும்.

அதிகாரப்பூர்வ குழுவில் 12 பேர் இருந்தனர், மேலும் 11 பேர் அதிகாரப்பூர்வ குழுவிலிருந்து தனித்தனியாக சென்றனர்.

ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து ஊடக பணியாளர்கள் இதில் அடங்கியிருந்தனர். இதனை தவிர, இரண்டு தனித்தனி பாதுகாப்புப் படைகள் ஆகியவை சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஒரு சில மட்டுமே என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...