5 40
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட அதிக பணம்

Share

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட அதிக பணம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திற்காக 50 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இந்த சுற்றுப்பயணத்தில் 77 பேரை அழைத்துச் சென்றார், இதில் அப்போதைய முதல் பெண்மணி உட்பட மொத்தம் ஒன்பது அமைச்சர்கள் அடங்கியிருந்தனர்.

அதிகாரப்பூர்வ குழுவில் 28 உறுப்பினர்கள், இரண்டு நெறிமுறை அதிகாரிகள், 13 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 28 ஊடக பணியாளர்களும் இருந்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் மொத்த செலவு 50.4 மில்லியன் ரூபாய்கள்; என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக 72 உறுப்பினர்களை அழைத்துச் சென்றார்.இதன் மொத்த செலவு 9.5 மில்லியன் ரூபாய்கள் ஆகும்.

அதிகாரப்பூர்வ குழுவில் 12 பேர் இருந்தனர், மேலும் 11 பேர் அதிகாரப்பூர்வ குழுவிலிருந்து தனித்தனியாக சென்றனர்.

ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து ஊடக பணியாளர்கள் இதில் அடங்கியிருந்தனர். இதனை தவிர, இரண்டு தனித்தனி பாதுகாப்புப் படைகள் ஆகியவை சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஒரு சில மட்டுமே என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....