899996 64644 ymvbvgbkmq 1501660736
அரசியல்இலங்கைசெய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழல்: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார்!

Share

நாட்டிற்குப் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான விலைமனுக்கோரல் செயல்பாட்டில் தலையிட்டு, ரூ. 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார். அவரை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் சாட்சியங்களைச் சமர்ப்பித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவுக்கு எதிரான புகாரை CIABOC முன்வைத்த போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அர்ஜுன ரணதுங்க வெளிநாட்டில் இருப்பதால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று CIABOC நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல் சந்தேக நபரான தம்மிக்க ரணதுங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் சாலிய பீரிஸ், விசாரணைகளுக்கு உதவி செய்யும் தமது கட்சிக்காரரை பிணைச் சட்டத்தின்படி விடுவிக்குமாறு கோரினார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த தலைமை நீதவான் தம்மிக்க ரணதுங்கவை தலா ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சாட்சிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது என அவரை கடுமையாக எச்சரித்தார். சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...