இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் - சடலத்தை காண வந்த தோழி
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை காண வந்த தோழி

Share

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை காண வந்த தோழி

இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார்.

சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

டென்மார் பெண்ணின் உடல் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது உடல் கடந்த 14ஆம் திகதி வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பெண் கண்டி ஹோட்டலில் இருந்து மலையேறுவதற்காக சென்ற போது, ​​கடந்த 10ஆம் திகதி இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக உடல் விரைவாக சிதைவடையவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும். அவரது மரணம் குறித்து, இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையேறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறப்படும் டென்மார்க் பெண்ணின் சடலம் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, 20 டொலர் தாள்கள் ஐந்தும், இரண்டு 05 டொலர் தாள்கள் மற்றும் 62000 இலங்கை நாணயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கையடக்க தொலைபேசி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...