25 693893d136522 md
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரண உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு: சிறப்பு விமானம் இலங்கை வந்தடைந்தது!

Share

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கவிருந்த நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோ வரை அதிகரித்துள்ளதுடன், முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று (17) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான போயிங்-747-400 (Boeing-747-400) ரக விசேட சரக்கு விமானம் மூலம் ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளின் மனிதாபிமான உதவிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரணப் பொருட்கள். கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்.

இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

முதலில் 1.8 மில்லியன் யூரோவாக அறிவிக்கப்பட்ட இந்த உதவித் தொகை, தற்போது 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...