11 17
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

Share

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக லெபானனில் மோசமான போர் பதற்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிராந்திய வலயத்தில் குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதனை கருத்திற் கொண்டு அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அந்தந்த நாடுகளில் காணப்படும் இலங்கைத் தூதரகங்களின் ஊடாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் அந்தந்த நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் அடிக்கடி அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மத்திய கிழக்கில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அதன் அடிப்படையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் அவசர சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களின் உறவினர்கள், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 011 – 2338812/ 011 – 7711194 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....