இலங்கைசெய்திகள்

கொரோனா அறிகுறிகளுடன் பாராளுமன்றம் வந்த ஊழியர் – பிறகு நடந்தது!!

Share

காய்ச்சல், தடிமல் உள்ளிட்ட கொவிட் 19 அறிகுறிகளுடன் பாராளுமன்றத்திற்கு வந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர் ஒருவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கொவிட் 19 அறிகுறிகள் தொடர்பில் அறிந்தும் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சமீபத்தில் முகம் சிவந்து பல்வேறு அறிகுறிகளுடன் இருந்துள்ளார்.

இதை அவதானித்த மற்ற ஊழியர் ஒருவர் உங்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் உடனடியாக சென்று கொவிட் 19 பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

எனினும் அவர் அதை அலட்சியப்படுத்தியதுடன் ஏனைய ஊழியர்களை அவ்வப்போது வலுக்கட்டாயமாக கட்டித் தழுவியதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  பாராளுமன்றத்தின் தலைமை அதிகாரிகளுக்கு இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

அவ்வறிக்கையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவரைக் கட்டிப்பிடித்த ஊழியர் உட்பட, திணைக்களத்தில் இருந்த  ஐந்து ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று இருந்தமையும் பரிசோதனைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த ஊழியரின் பொறுப்பற்ற நடத்தையால் அப்பிரிவு ஊழியர்களிடையே கொவிட் பரவியிருக்கலாம் என பாராளுமன்ற அதிகாரிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்றத்தில் கொவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்து வரும் இவ்வேளையில் சில ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவது பிரச்சினைக்குரிய விடயம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவரது குடும்பத்தினரும் காய்ச்சலுடன் வீட்டில் இருந்த வேளையில் இந்த ஊழியர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

கொவிட் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்றத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

எனினும் அவர் வீட்டுக்குச் சென்ற பிறகும் காய்கறி வாங்க பொதுச் சந்தைக்குச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...