19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

Share

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தகவல்களில் குறிப்பிடப்படிருக்கும் விடயங்களின்படி, 1920 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி இலங்கையின் வனப்பரம்பல் 49 முதல் 50 வீதம் வரை இருந்துள்ளது.

ஆனால் 80 வருடங்களின் பின்னர் 20 வீத வனப்பரம்பலே இருக்கிறது. அவ்வாறு என்றால் இலங்கையில் காடுகள் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது.

இவற்றின் அடிப்படையில் நோக்கினால் யானைகள் வாழ்வதற்கான காடுகள் இல்லை. அதன் படி 70 வீத யானைகள் வாழ்ந்த நிலப்பரப்பில் மக்கள் வாழ்விடங்களை அமைத்துள்ளனர்.

இலங்கையின் மொத்த நிலப்பகுதியில் 82 வீதம் மக்கள் வசிக்கும் பகுதிகளாகும்.அவற்றில் யானைகளில் வாழ்விடங்களாக 62 வீதம் காணப்படுகிறது.

இதுவே யானை மனித மோதல் உக்கிரமடைவதற்கான மூல காரணமாகும்.

இலங்கையில் சுமார் 6000 யானைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சரியான தகவல்கள் இல்லை. அவ்வாறு எடுத்துப் பார்த்தால் 6000 யானைகளில் 4000 யானைகள் மனிதர்களுடன் சேர்ந்திருப்பதாக கொள்ள வேண்டும்.

அதாவது 19 மாவட்டங்களில் 131 பிரதேச செயலர் பகுதிகளிலும் யானைகள் வியாபித்து காணப்படுகிறது. ஆகையால் யானை மனித மோதலை அரசியலாக பார்க்க வேண்டாம்.அவை சமூக -பொருளாதார் பிரச்சினையாக நோக்கினால் தீர்வை கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...