19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

Share

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தகவல்களில் குறிப்பிடப்படிருக்கும் விடயங்களின்படி, 1920 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி இலங்கையின் வனப்பரம்பல் 49 முதல் 50 வீதம் வரை இருந்துள்ளது.

ஆனால் 80 வருடங்களின் பின்னர் 20 வீத வனப்பரம்பலே இருக்கிறது. அவ்வாறு என்றால் இலங்கையில் காடுகள் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது.

இவற்றின் அடிப்படையில் நோக்கினால் யானைகள் வாழ்வதற்கான காடுகள் இல்லை. அதன் படி 70 வீத யானைகள் வாழ்ந்த நிலப்பரப்பில் மக்கள் வாழ்விடங்களை அமைத்துள்ளனர்.

இலங்கையின் மொத்த நிலப்பகுதியில் 82 வீதம் மக்கள் வசிக்கும் பகுதிகளாகும்.அவற்றில் யானைகளில் வாழ்விடங்களாக 62 வீதம் காணப்படுகிறது.

இதுவே யானை மனித மோதல் உக்கிரமடைவதற்கான மூல காரணமாகும்.

இலங்கையில் சுமார் 6000 யானைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சரியான தகவல்கள் இல்லை. அவ்வாறு எடுத்துப் பார்த்தால் 6000 யானைகளில் 4000 யானைகள் மனிதர்களுடன் சேர்ந்திருப்பதாக கொள்ள வேண்டும்.

அதாவது 19 மாவட்டங்களில் 131 பிரதேச செயலர் பகுதிகளிலும் யானைகள் வியாபித்து காணப்படுகிறது. ஆகையால் யானை மனித மோதலை அரசியலாக பார்க்க வேண்டாம்.அவை சமூக -பொருளாதார் பிரச்சினையாக நோக்கினால் தீர்வை கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...