27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு,இதற்கான முன்மொழிவை மின்சார சபை சமர்ப்பித்துள்ள நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காது போனாலும் மின்கட்டணத்தை அதிகரிக்கும் நிலைப்பாட்டில் மின்சார சபை உறுதியாக உள்ளது.

உற்பத்திச் செலவை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மின்கட்டணத்தைக் குறைந்தது 18.3 வீதத்தினால் அதிகரித்தே ஆகவேண்டும் என்று மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.

மின்சக்தியின் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையிலான கட்டண அதிகரிப்பொன்றை மேற்கொள்ளாது போனால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணை வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் பின்னணியிலேயே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...