மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தில்!

CEB

மின்சார சபை ஊழியர்கள் இன்று (27) சுகயீன விடுப்பு எடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார ஊழியர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version